Tuesday, May 28, 2013

ஆழ்கடலில்

யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகள் தான்
யாருக்கும் உதவாத தகவல் தான்
எளிதில் கடந்துவிடும் குறிப்புகள் தான்
என்னுள் நிரப்பி
எறியப்பட்டு
காலமறியாமல்
திசையறியாமல்
நிலை கொள்ளாமல் மிதக்கிறேன்
அமைதியான ஆழ்கடலில்..

அலை பற்றி
கரைத்தொட்டு
மணல் புதைந்து
வெயில் படிந்தும்
நிலை கொள்ளாமல் மிதக்கிறேன்

அள்ளிக் கையில் எடுத்து
கொஞ்சி முத்தம் கொடுத்து
கைகள் உரசி நடக்கும் போதும்
நிலை கொள்ளாமல் மிதக்கிறேன்

நிறம் மங்கி
ஒளி குன்றி
தீ தின்றும்'
நிலை கொள்ளாமல் மிதப்பேன்
வார்த்தைகள் நிரம்பி..











No comments: