Friday, October 5, 2012

அடையாளம் - 1

மிக
அகலமான சாலை
புழுதி பறக்காமல்
எண்ணற்ற
அதி வேகமான
வாகனங்கள் - வித விதமாய்

வாட்டமாய் நடைப்பாதை
ஆங்காங்கே
இன்று உதிர்ந்த
காய்ந்த சருகுகள்

நாட்கணக்கில்
மழை அடித்தும்
சகதி  படியாத
பாதை

மழையில் நனைந்து
இன்னும் சிறிது தூரம்
நடக்கலாம்

எங்காவது
மண்வாசனையை மட்டும்
மோப்பம் பிடித்து
ஒரு
குடுவையில்
அடைத்துக் கொள்ளவேண்டும்.

3 comments:

Pradeep said...

நாட்ல பாதி பேர் மண் வாசனைய வெளி நாட்ல தான் தேடிட்டு இருக்கோம் :)

Mr.E said...

Love it!

நவீன் said...

Thanks Elangovan