Tuesday, October 9, 2012

துண்டிக்கப்பட்ட பார்வை

கன நேரத்தில்
துண்டிக்கப்படும் பார்வை
திகைத்து
பின்
சாவகாசமாய் மிதக்கிறது
காற்றில் அலைகழியும்
ஒரு
காகித குப்பை போல

எப்போதாவது
மின்னிக்கொண்டு
எப்போதும்
விலகிக்கொண்டு

பதறி
சிதறும்
ஞாபக கிழிசலை
தைத்து
ரெக்கை
கட்டிக் கொள்கிறது

கன நேரத்தில்
துண்டிக்கப்பட்ட பார்வை
எங்கோ
மறைந்த பின்னும்
வால் மட்டும்
இன்னும்
துடித்துக்கொண்டிருக்கிறது..





No comments: