Friday, October 5, 2012

காற்றை நிரப்பும் வார்த்தைகள்

வெறும்
காற்றை நிரப்பும்
இந்த
வார்த்தைகள்..
வெளுப்பதைப் விட
கரைந்துவிடக் கூடாதா

என்ன சொல்லி
ஏற்றுக்கொள்வது
அந்த
சாயப் பூச்சற்ற
வார்த்தைகளை?

இப்பொழுதெல்லாம்
உதிர்ந்த உடனே
வெளுத்துவிடுகிறது..

இதுவும்
அலுப்பாய்த்தான் இருக்கிறது.



No comments: